இவ்வாண்டு நவராத்திரி விழா மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பின் காணும் நிகழ்வு முறைப்படி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
30.09.2016 வெள்ளிக் கிழமை அன்னையினால் ஏற்றப்படும் அகண்ட தீபம் நவராத்திரியில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.அகண்டத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றுவதன் மூலம் அவரவர்கள் ஊழ்வினை தணிவதுடன் கிரகதோஷம்,பில்லி,சூனியம் முதலிய இடையூறுகள் நீங்கப்பெற்று திருமணம்,மக்கட்பேறு,மன அமைதி பெறுதல் ஆகிய நற்பேறுகளையும், அன்னையின் திருவருளையும்,அருள்திரு அடிகளார் அவர்களின் குருவருளையும் பெற வேண்டுகிறோம்.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை சிறப்பு அபிடேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.30.09.2016 வெள்ளிக்கிழமை தொடங்கி 11.10.2016 செவ்வாய்க்கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இலட்சார்ச்சனை நடைபெற்றது